ஒரு தீவிர அரசியல் விமர்சகருடன், நடப்பு அரசியல் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.
பேச்சு, சட்டமன்ற தேர்தல் முடிவு, சொத்துக் குவிப்பு, நில அபகரிப்பு,கைது படலம், காவல்துறை மாற்றங்கள், பரமக்குடி சம்பவம், திமுக முப்பெருவிழா, தனியார் கல்லூரியில் அரசியல்வாதிகளின் அளுமை. அரசுக்கே படியளக்கும் டாஸ்மாக் மக்களுக்கு சரக்கு சப்ளை செய்யும் அரசியல்வாதிகளின், உபிசா வின் கம்பனிகள் அடிக்கும் கொள்ளை லாபங்கள், ஆட்சி மாறி இலவச வீட்டு திட்டம் கைவிடப்பட்டும் இறங்காத மணல், சிமெண்ட், செங்கல் விலைகள், சிறு கட்சிகளின் மீது திணிக்கப்பட்ட கூட்டணி இல்லாத பஞ்சாயத்து தேர்தல் என மாநில விவரங்கள் பற்றி பேசி ஒரு வட்டம் முடிவுக்கு வந்தது.

அடுத்த கட்டமாக பேச்சு மாநில எல்லைகள் தாண்டி மைய்ய அரசில் மையம் கொண்டது.
2ஜியின் முன்னனி, பின்னனி பற்றிய அலசல், யுபிஏ 1க்கும் 2க்கும் ( இது வேற 1, 2) ஆன ஒற்றுமை, வேற்றுமை, முரண் (சினிமா அல்ல), சோனியாவின் உடல்நலம், கருப்பு பணம், ராகுலின் பிரதமர் கனவு, மந்திரி பிரதானிகளின் "வருங்கால பிரதமர் பாராக்" ஓசை பற்றிய பேச்சில் வந்து நின்றது.
எப்படி மன்மோகன் பிரதமராய் இருக்கும் போதே, சிதம்பரமும், பிராணாப்பும் அடுத்த தலைவர் ராகுல் தான் என்கின்றனர். நூற்றியிரண்டு கோடி மக்கள் வாழும் இந்த மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைமைக்கு இந்த ஒரு குடும்ப நபர்கள் (நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல்) தவிர்த்து வேறு ஆட்களே இல்லையா? இந்த பிரதமர் ஏன் இப்படி யுஎஸ் அணுநிலைய பாரளுமன்ற வோட்டெடுப்பில் நாணயம் தவறுகிறார், காமன்வெல்த்தில் கண்ணைக்கட்டிக் கொள்கிறார், சிதம்பரத்தை நம்புகிறேன் என்கிறார்,சராசரி 32 ரூபாய் சம்பாதித்தால் ஏழையில்லை என்கிற திட்டகமிஷன் தலைவரான இவரே எம்பிகளூக்கு சம்பளத்தை மூன்று (80000.00) மடங்கு உயர்த்துகிறார் போன்ற என் தவிப்பிற்கு, சிரித்துக் கொண்டே, மன்மோகன் சிங் ஒரு "கம்பத்து ஆமை" ('post turtle') என்றார். உவமை புதிதாய் ஒன்றும் புரியாமல் குழப்பியாதால், மறுபடியும் சொல்லுங்களேன் என்றேன்.
இந்தப் படத்தைக் காட்டி, பின் விளக்கினார்.
'post turtle'
இந்த ஆமை அதுவாய் ஏறி போய் அங்கு அமரவில்லை, அதற்கான இடமும் அது இல்லை, ஆமைக்கு தனக்கு சம்பந்தமேயில்லாத அந்த இடத்திலிருந்து என்ன செய்வது எனவும் தெரியாது, செய்யவும் முடியாது. தன் தகுதிக்கு மீறிய உயர்த்தி அமர்ததப்பட்ட இடத்திலிருந்து ஒன்றும் செய்யவியாலது. அந்த இடத்தில் அந்த ஆமையை அமர்த்திய முட்டாள்களைத் தான் நாம் குற்றம் சொல்ல வேண்டுமே தவிர, பாவம் அந்த கம்பத்தின் மீது வாளாவிருக்கும் ஆமை மீது அல்ல என்றார்.
இந்திய மக்களின் செயலுக்கு சரியான பாடம் தான் என்றேன்.

முட்டாள், அவர் ராஜ்ஜிய சபா வழியா சோனியா மேடத்தாலே கொண்டுவரப்பட்டவர், மறந்துட்டியா என்றார்.
தலையை சொரிந்து கொண்டே, ஆமால்ல, சே.. மறந்துட்டேன் என்றேன். இந்தியன் இல்லையா நானும்!!
(அசடு வழிந்தது தனி...)
பேச்சு, சட்டமன்ற தேர்தல் முடிவு, சொத்துக் குவிப்பு, நில அபகரிப்பு,கைது படலம், காவல்துறை மாற்றங்கள், பரமக்குடி சம்பவம், திமுக முப்பெருவிழா, தனியார் கல்லூரியில் அரசியல்வாதிகளின் அளுமை. அரசுக்கே படியளக்கும் டாஸ்மாக் மக்களுக்கு சரக்கு சப்ளை செய்யும் அரசியல்வாதிகளின், உபிசா வின் கம்பனிகள் அடிக்கும் கொள்ளை லாபங்கள், ஆட்சி மாறி இலவச வீட்டு திட்டம் கைவிடப்பட்டும் இறங்காத மணல், சிமெண்ட், செங்கல் விலைகள், சிறு கட்சிகளின் மீது திணிக்கப்பட்ட கூட்டணி இல்லாத பஞ்சாயத்து தேர்தல் என மாநில விவரங்கள் பற்றி பேசி ஒரு வட்டம் முடிவுக்கு வந்தது.

அடுத்த கட்டமாக பேச்சு மாநில எல்லைகள் தாண்டி மைய்ய அரசில் மையம் கொண்டது.2ஜியின் முன்னனி, பின்னனி பற்றிய அலசல், யுபிஏ 1க்கும் 2க்கும் ( இது வேற 1, 2) ஆன ஒற்றுமை, வேற்றுமை, முரண் (சினிமா அல்ல), சோனியாவின் உடல்நலம், கருப்பு பணம், ராகுலின் பிரதமர் கனவு, மந்திரி பிரதானிகளின் "வருங்கால பிரதமர் பாராக்" ஓசை பற்றிய பேச்சில் வந்து நின்றது.
எப்படி மன்மோகன் பிரதமராய் இருக்கும் போதே, சிதம்பரமும், பிராணாப்பும் அடுத்த தலைவர் ராகுல் தான் என்கின்றனர். நூற்றியிரண்டு கோடி மக்கள் வாழும் இந்த மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைமைக்கு இந்த ஒரு குடும்ப நபர்கள் (நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல்) தவிர்த்து வேறு ஆட்களே இல்லையா? இந்த பிரதமர் ஏன் இப்படி யுஎஸ் அணுநிலைய பாரளுமன்ற வோட்டெடுப்பில் நாணயம் தவறுகிறார், காமன்வெல்த்தில் கண்ணைக்கட்டிக் கொள்கிறார், சிதம்பரத்தை நம்புகிறேன் என்கிறார்,சராசரி 32 ரூபாய் சம்பாதித்தால் ஏழையில்லை என்கிற திட்டகமிஷன் தலைவரான இவரே எம்பிகளூக்கு சம்பளத்தை மூன்று (80000.00) மடங்கு உயர்த்துகிறார் போன்ற என் தவிப்பிற்கு, சிரித்துக் கொண்டே, மன்மோகன் சிங் ஒரு "கம்பத்து ஆமை" ('post turtle') என்றார். உவமை புதிதாய் ஒன்றும் புரியாமல் குழப்பியாதால், மறுபடியும் சொல்லுங்களேன் என்றேன்.
இந்தப் படத்தைக் காட்டி, பின் விளக்கினார்.
'post turtle'
இந்த ஆமை அதுவாய் ஏறி போய் அங்கு அமரவில்லை, அதற்கான இடமும் அது இல்லை, ஆமைக்கு தனக்கு சம்பந்தமேயில்லாத அந்த இடத்திலிருந்து என்ன செய்வது எனவும் தெரியாது, செய்யவும் முடியாது. தன் தகுதிக்கு மீறிய உயர்த்தி அமர்ததப்பட்ட இடத்திலிருந்து ஒன்றும் செய்யவியாலது. அந்த இடத்தில் அந்த ஆமையை அமர்த்திய முட்டாள்களைத் தான் நாம் குற்றம் சொல்ல வேண்டுமே தவிர, பாவம் அந்த கம்பத்தின் மீது வாளாவிருக்கும் ஆமை மீது அல்ல என்றார்.
இந்திய மக்களின் செயலுக்கு சரியான பாடம் தான் என்றேன்.

முட்டாள், அவர் ராஜ்ஜிய சபா வழியா சோனியா மேடத்தாலே கொண்டுவரப்பட்டவர், மறந்துட்டியா என்றார்.
தலையை சொரிந்து கொண்டே, ஆமால்ல, சே.. மறந்துட்டேன் என்றேன். இந்தியன் இல்லையா நானும்!!
(அசடு வழிந்தது தனி...)











