காங்கிரஸின் பழைய சரித்திரத்தை திருப்பிப் பார்த்தால் அது மலரும் நினைவுகளாக மணக்காது, கிளரும் குப்பையாய்த் தான் இருக்கும் என்பது பாவம், இத்தாலியிலிருந்த சோனியாவுக்கு தெரிய வாய்ப்பில்லை.
அதே போல், மாமியார் வீட்டு சீதனத்தில் 1985ல் அரசியலுக்கு வந்த சிதம்பரத்திற்கும் முழுக்கதை தெரியாமலிருக்கலாம்.
காம்பிரிட்ஸின் பொருளாதார மேதையான ரிசர்வ் வங்கியில் இருந்து நரசிம்மராவால், பின்வாசல் வழியாய் பார்லிமெண்டுக்கு வந்து அதே 1985 ல் நிதி மந்திரியாகி தற்போது 2 வது 'முறை'யாக பிரதமராய் ஆக்கப்பட்டிருக்கும் மன்மோகன் சிங்கிற்கும் 125 வருட காங்கிரஸ் வரலாறு தெரிய வாய்ப்பில்லை.
ஆனால் இவ்வளவு காலம் (1969முதல்) டெல்லி அரசியலில், மந்திரிசபைகளில் மந்திரியாய் இருந்தும்,(இந்திராவின் கொலைக்குப்பின் ராஜீவ் ஒதுக்கியதில் புது கட்சி தொடங்கியது தனிக் கதை) குறிப்பாய், 21 மாத எமர்ஜென்சி காலத்தில் (ஆகஸ்ட் 1975 முதல் மார்ச் 1977)ஆட்சியிலிருந்தும், இந்த புத்தகத்துக்கு தலமை ஆசியாராக வேறு இருக்கும், திரு பிரணாப் முகர்ஷிக்கு சஞ்சயின் பங்கு என்ன, எந்த அளவு எனத் தெரியும் தானே. பின் ஏன் சோனியாவுக்காக, எல்லா தவறும் சஞ்சய்க்கே, நன்மையெல்லாம் அன்னை இந்திராவுக்கே என்று, காங்கிரஸ் மற்றும் நாட்டின் சரித்திரத்தை தவறாக பதிவாக்குகிறீர்கள்? பின் எப்படி நிகழ்காலத் தலைமுறை முந்நாள் சரித்திரங்களை நம்புவார்கள்?
1971 பொதுதேர்தலில் ராஜ் நராய்ண்-ஐ எதிர்த்து ரா பெரெய்லில் இந்திரா ஜெயித்தது செல்லாது (அரசியல் யந்திரங்கள், அதிகாரிகள் மற்றும் லஞ்சம்) என 12 ஜூன் 1975 அலகாபாத் நீதிமனறம் தீர்ப்பளித்தது.
மேலும் ஆறாண்டுகாலம் தேர்தலில் நிற்க தடை வேறு.
வழக்காடியது இப்போதைய மக்கள் பொதுநல வழக்கறிஞர் 2G புகழ் பிரசாந்த் பூஜனின், தந்தை சாந்தி பூஜன் அவர்கள். தன்னால் நாட்டை, ஜனநாயக முறைப்படி,சட்டப்படி ஆள முடியதென அறிந்து, அவசரகால (எமர்ஜென்சி)சட்டத்தை அறிவித்து, நாட்டிற்கு சர்வாதிகாரி ஆனார்.
சஞ்சய், பிறந்தது முதலே (பிறப்பே) தகராறுதான். ராஜிவ் அரசியல் அறியாது வெளிநாடுகளில் இருந்த போது, இந்திராவின் வாரிசாய் அட்டகாசம் செய்தவர் சஞ்சய்.
கட்டாய கருத்தடையை அனவருக்கும் (முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல) அமுல் படுத்தினார். தமிழகத்தில் திமுக(முக)வின் அந்தக் காலத்தின் கிராம அதிகாரிகள், ஆசிரியர், அசிரியைகளிடம் கேளுங்கள். மாருதிகார் இந்தியாவிற்கு வர பாடுபட்டவர்களில் ஒருவர். டெல்லி பாலிகா பஜார் (அண்டர் கிரவுண்டு மால்) அவரது திட்டம். அம்மாவுக்கே புத்தி சொன்ன நவீன முருகன் எனக் கொண்டாடப்பட்டவர், இதே பிரணாப் அவரிடம் கைகட்டி நின்றிருக்கலாம்.அன்னை இந்திராவிக்கே மகன் சஞ்சயிடம் கொஞ்சம்.....என அவ்வப்போது செய்திகள் கசிந்ததுண்டு.
இன்று, இந்திராவும் இல்லை, அந்த மனிதனும் இல்லை, அவர் மணைவி வாயில்லா விலங்குகளுக்கும், வாயுல்ல (வருண்) மகனுக்காவும் எதிரணியில். ஆகவே முகர்ஷி "125 வது ஆண்டுகள் காங்கிரஸ், இந்தியாவை ஆக்கியதில்" என்ற புத்தகத்தில், சஞ்சயை பலிகடா ஆக்குகிறார். மந்திரி பதவிக்கு அடுத்து, நிறைய புத்தகங்கள் படிக்கணும், எழுதனும்னு டிவி-ல முன்பு சொன்னார். (அதுனால கவர்னர் போஸ்ட் கிடைச்சா)....ம். எழுதுலாம். ராகுல், அபிமன்யு போல் அன்னை சோனியா வயிற்றிலிருக்கும் போதே, இந்திராவிடம் அரசியல் பாடம் கற்றவர். அப்பா ராஜீவிடம் போபர்ஸ் பிரங்கி வித்தையை நன்கு கற்ற வருங்கால இந்திய மன்னர் ராகுல் தான் என்று.நவீன மகா பாரதத்தின் 'அபிமன்யூ' .
வாழ்க காங்.. சாரி..நேரு கா...பரம்பரை.
வாழ்க இந்.., இத்தாலி.
Video: Congress disowns Sanjay Gandhi NewsX























